ஈழம் – தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி | Eelam – A teardrop in the middle of ocean

21ம் நூற்றாண்டில் நமது கண்முன்னே நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறோமென்று மார்தட்டிக் கொண்டாலும், நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு முதன்மையான காரணம், தமிழர்களுக்கு ஈழத்தின் பூர்வகுடிகள் யார் என்ற புரிதல் இல்லை என்பதுதான். ஈழத்தின் பூர்வகுடிகள் யார் என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்து, தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். In the 21st century, our Tamil peoples were massacred…

தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி

உருட்டி வைத்த மைதா மாவு அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால்…