காமராஜர் AC இல்லாமல் தூங்க மாட்டாரா? | Trichy Siva controversial speech about Kamarajar

எளிமையின் அடையாளம் காமராஜர். ஒரு அரசியல்வாதி இப்படித்தான் இருக்க வேண்டுமென்று வாழ்ந்து காட்டியவர் பெருந்தலைவர் காமராஜர். வாழ்நாள் முழுவதும் ஒரு வாடகை வீட்டில்தான் வாழ்ந்தார். திருச்சி சிவா என்னும் வரலாற்றைப் படிக்காத ஒருவர், காமராஜர் AC இல்லாமல் தூங்க மாட்டார். காமராஜர் சென்ற இடமெல்லாம் கருணாநிதி AC வைத்துக் கொடுத்தார் என்றெல்லாம் பச்சைப்பொய்களை சொல்கிறார். இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் மீது சொன்ன அவதூறுகளுக்கான பதிலடிதான் இந்தக் காணொளி. Kamarajar is the epitome…

தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

தமிழை மறந்து போன தமிழர்களுக்கு, பச்சைத்தமிழனின் கடிதம். மடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த சிறு தயக்கம். ஏனென்றால், சங்க காலத்தில் மடலேறுதல் என்பது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடம் ஊரறிய பகிரங்கமாக தனது காதலை சொல்வதற்கு பயன்படுத்தும் ஒரு செயல். அது ஐந்திணை ஒழுக்கத்தில் வராது, அதனால் மடல் என்பதை விட கடிதம் என்ற வார்த்தையைக்  குறிப்பிட விரும்புகிறேன். இது தாய்த்தமிழை நேசிப்பவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமல்ல என்பதையும் பதிவு செய்கிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் யாரும் தமிழன் கட்டிய கோயிலில்,…