அடிமைப்பட்டுக் கிடப்பதை விட கேவலமானது நாம் அடிமையாய் இருக்கிறோமென்று உணராமல் இருப்பது. இந்த வாக்கியம் பெரும்பாலான தமிழர்களுக்கு கனக்கச்சிதமாய்ப் பொருந்தும். நமது மாநிலத்தை எவன் ஆண்டாளும் கவலையில்லை, ஆனால் பூர்வக்குடி தமிழர்கள் மட்டும் ஆட்சி செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் வாக்களிப்பவர்கள்தான் அதிகம். அதனால்தான் தமிழ்நாட்டைக் காலங்காலமாய் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், அடிமை மனநிலையில் இருந்து தமிழர்கள் மீண்டு வரவேண்டும். அப்படி மீண்டு வந்தால்தான் தமிழர்கள் இந்த மண்ணில்…
Tag: Tamil Nadu history
பழமொழிகளில் புதைந்த தமிழ் வரலாறு! | Tamil Proverbs with the history of Tamilnadu!
பழமொழிகள் ஒன்றிரண்டு வரிகள்தான் என்றாலும், அது தாங்கி நிற்கும் வரலாற்றின் ஆழம் அதிகம். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ என்ற ஒற்றை வரியின் மூலம் குறிஞ்சி நிலத்தின் நாகரிகம் வரைக்கும் நம்மால் பயணப்பட முடிகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சில பழமொழிகளைக் காணலாம். காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வரலாறு தெரியாமல் ‘தமிழ்நாடு’ என்று சொல்லாதீர்கள்!
தமிழர்கள் சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, ஈழ நாடு என்று பல நாடுகளாகப் பிரிந்து வாழ்ந்தாலும், ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் வாழும் பகுதி தமிழ்நாடு என்னும் புரிதல் தமிழர்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்திலேயே மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. பெருந்தலைவர் ஆட்சிகாலத்துக்கு முன்பே, பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனும் தமிழ்நாடு என்று பாடி விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் முன்பு, பெரியபுராணம், கம்பராமாயணம்,…
